“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்! சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி  சார்பாக வழக்கறிஞர் மனுராஜ்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில்,  “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான … Read more

ஆளுநர்கள் வாரிசுகள் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை! கனிமொழியின் கருத்துக்கு தமிழ் இசை சவுந்தரராஜன் அதிரடி விளக்கம்!

ஆளுநர்கள் வாரிசுகள் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை! கனிமொழியின் கருத்துக்கு தமிழ் இசை சவுந்தரராஜன் அதிரடி விளக்கம்!

புதுவை அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஜன்ஜட்டியா கௌரவ் திவாஸ் விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா போன்றோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த விழா முடிவற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில நாட்களுக்கு முன்னர் ஒரு புரட்சி இங்கே பிரிவினையை பற்றி பேசிய சமயத்தில் ராணுவ வீரர் ஒருவர் நாட்டின் எல்லையில் … Read more

ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டை புகழும் எதிர்க்கட்சியினரை என்ன சொல்வது? இதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று திமுகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக ஆளுநரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த புகார் மனுவையும் வழங்கினர். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு … Read more

தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!

தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!

கோவையில் உயர்கல்வி நிறுவனத்தில் 21 ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயார்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாணவிகளிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பெண்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்தார். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்று தெரிவித்த அவர், மேலும் சில கட்டுப்பாடுகளை பெண்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பெண்கள் தங்களுடைய … Read more

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதன் பிறகு தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதாவது தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான நிலைக்கு வருவது … Read more

திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!

திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நேற்றைய தினம் திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் பிரச்சாரத்தை அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தடுப்பது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது அதோடு முன்னரே திமுகவில் முடிவெடுத்து வைக்கப்பட்டிருக்கும் மண்டல பொறுப்பாளர்கள் அறிவிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை குழுதுணைத் தலைவருமான கனிமொழி நேற்றைய உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் அறிக்கை … Read more

விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி செய்த அந்த காரியத்தால்! நெகிழ்ந்து போன குடும்பம்!

விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி செய்த அந்த காரியத்தால்! நெகிழ்ந்து போன குடும்பம்!

லடாக் எல்லையில் நடந்த ஒரு விபத்தில் பலியான கோவில்பட்டி ராணுவ வீரர் உடைய குடும்பத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுதல் தெரிவித்ததோடு 2 லட்சம் நிதி உதவியும் வழங்கி இருக்கின்றார். தூத்துக்குடிக்கு அருகில் இருக்கின்ற கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவருடைய மகன் கருப்பசாமி. இவர் கடந்த 14 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார். நாயக் பதவியை வகித்து வந்திருக்கின்றார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணிபுரிந்து வந்த இவர் விபத்தில் வீரமரணமடைந்து … Read more

“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

"அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?" மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகு, எதற்கு மீண்டும் ஊரடங்கு வேண்டும்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.   கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி அத்தைக்கொண்டான் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது, “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திமுக போராடி … Read more

தேர்தலுக்காக திமுகவினர் போட்ட நாடகம்! அம்பலப்படுத்திய ஹச் ராஜா

H Raja Says Next Arrest will Be Dayanidhi Maran-News4 Tamil Online Tamil News

திமுகவின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அங்கு சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு பற்றி கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது தனக்கு இந்தி தெரியாது தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தெரியும், அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா? என்று … Read more

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம்

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம்

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசால் இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம் சமீபத்தில் வெளியான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ பி எஸ் பதவிகளுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்ணை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட மதிப்பெண் குறைவாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுகவின் மக்களவை உறுப்பினரான … Read more