நான்காவது முறையாக கோப்பையை வென்ற நைட் ரைடர்ஸ் அணி

நான்காவது முறையாக கோப்பையை வென்ற நைட் ரைடர்ஸ் அணி

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற கிரண் பொல்லார்டு அணியான  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தன. அதன்படி முதலில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் செயின்ட் லூசியா … Read more

எங்கள் அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும்

எங்கள் அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும்

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பேசும்போது ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும். தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம். நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் … Read more

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி வெல்வது யார்?

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி வெல்வது யார்?

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. … Read more

ரஷ்யாவில் நடைபெற்ற மாநாடு

ரஷ்யாவில் நடைபெற்ற மாநாடு

‌ரஷ்ய ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்ஷங்கரும், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியும் சந்தித்துப் பேசினர். ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

கடைசி போட்டியில் மட்டும் என்னை சேர்ப்பதா? முன்னாள் கேப்டன் ஆதங்கம்

கடைசி போட்டியில் மட்டும் என்னை சேர்ப்பதா? முன்னாள் கேப்டன் ஆதங்கம்

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் விளையாடியபோது பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது இடம்பிடித்திருந்தார். ஆனால் மூன்று டெஸ்ட் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு தருவதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்போது அவர் விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், சர்பராஸ் அகமது கடைசி போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மிஸ்பா உல் ஹக்  சர்பராஸ் அகமது விளையாட … Read more

நான் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடுவேன்

நான் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடுவேன்

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால்  இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது பிசிசிஐ. பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அவரது தடைக்காலம் முடிய இருக்கிறது. இந்நிலையில் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஐபிஎல் … Read more

மீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்

மீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்

சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி தாமதம் ஆனது. 2 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் கடந்த 4-ந்தேதியில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹர் அதில் இருந்து முற்றிலும் குணமடைந்து உள்ளார். இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மீண்டும் இணைந்து  … Read more

இதுதான் உலகின் சிறந்த போர் விமானம் – எம்எஸ் டோனி

இதுதான் உலகின் சிறந்த போர் விமானம் - எம்எஸ் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இறுதியாக சேர்க்கப்பட்ட விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவுக்கு  வாழ்த்துக்கள். ரபேல் ‘மிராஜ் 2000’-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்

செரீனா வில்லியம்சனுடன் அரையிறுதியில் மோத போகும் இந்த வீராங்கனை

செரீனா வில்லியம்சனுடன் அரையிறுதியில் மோத போகும் இந்த வீராங்கனை

செரீனா அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர்சை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நவோமி ஒசாகா அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் இன்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர்செட்களில் எலிஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.