பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியப்படாது - அமைச்சர் செங்கோட்டையன்!

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. ஏனென்றால், கொரோனா என்ற நோய் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை.  அதுமட்டுமன்றி இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் செயல் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலமே ஆசிரியர்கள் … Read more

அரியர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரியர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இறுதி செமஸ்டர் தேர்வுகளை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரிய தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஏன் ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அரியர் தேர்வு ரத்து என்பது குறித்த பதில் மனுவை தாக்கல் செய்யாத பல்கலைக்கழகத்தின் மானியக் குழுவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை … Read more

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்படி தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கல்வியாண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின்போது 74 காலி இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு மீண்டும்  வழங்கியுள்ளனர் என்றும்  தனியார் மருத்துவ கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு மேற்படிப்பிற்கான இடத்தை ஒதுக்கி தருவதை, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு முறைகேடு நடப்பதால் இது … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு – புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு - புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு. இந்த அறிவிப்பால் அங்கிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தங்களின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கூறியதாவது : “நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான … Read more

டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

அரியர் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், “அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நீட்டிக்க கோரி” மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரின் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மாணவர் ஏற்கனவே டிப்ளமோ பிரிவில் தேர்வு எழுதி, தேர்வின் மறுமதிப்பீடு முடிவில்  தோல்வி பெற்றிருந்தார், மீண்டும் அரியர் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். அப்போது அவர் கல்லூரிக்கு சென்றிருந்த போது, ‘அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த … Read more

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் – யாருக்கு தெரியுமா?

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் - யாருக்கு தெரியுமா?

மைசூர் பல்கலைக்கழகம் தனது நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே நேரில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பிற மாணவர்களும், பெற்றோர்களும், பல்கலைக்கழகத்தை சேர்ந்த இதர உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சி கர்நாடக ஆளுநர் தலைமையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியை … Read more

ஆதார் ஆணையம் கைவிரிப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

ஆதார் ஆணையம் கைவிரிப்பு - சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் மோசடி ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அதில் 2 மாணவிகள் உள்பட 10 பேர் மீது ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிபிசிஐடி இந்த 10 மாணவ – மாணவிகளின் புகைப்படங்களை பெங்களூரிலுள்ள ஆதார் ஆணையத்தில் கொடுத்து, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துள்ளது.  … Read more

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் வருகை!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையில், அதாவது 50 சதவீத எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.  மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  பெற்றோரின் … Read more

தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

UGC என்பது அனைவருக்கும் சமமான உயர்தர கல்வியை வழங்குவதற்காக அரசால்  அமைக்கப்பட்டதாகும். இந்த அமைப்பு தற்போது தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேசிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பற்றிய கருத்துக்களை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், மாணவர்களும், பெற்றோர்களும், பேராசிரியர்களும், கல்வியாளர்களும் என அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு கொண்டு வருகின்றனர். தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுவதற்கு கடைசி நாளாக அக்டோபர் மாதம் 18-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

நீட் தேர்வுக்கான உள்ஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் – கண்கலங்கிய நீதிபதி!

நீட் தேர்வுக்கான உள்ஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் - கண்கலங்கிய நீதிபதி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியல் தயாரிப்பதில் தாமதம் காட்ட முடியுமா என்று மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கிராமப்புற மாணவர்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் அளவிடற்கரியது என்று கூறி நீதிபதி கண்கலங்கினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டிய மனு எந்த நிலையில் உள்ளது, நடப்பாண்டிலேயே மாணவர்களுக்கு ஒதுக்கீடு கிடைக்குமா என்பது குறித்த விசாரணை … Read more