திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை … Read more

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் … Read more

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் … Read more

கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!

கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!

இன்று கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டியுள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரம் பகுதியில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திற்கு பொருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கத்தில் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும் காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதினால் … Read more

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!

வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (நாளை) மத்திய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழக நிர்வாக இயக்குனரான சுதாதேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து … Read more

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சின்னசேலத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திற்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட வந்த நிலையில் ,அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சரக்கு ரயில் மூலமாக பல்வேறு மாநிலங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் … Read more

வெங்காயத்துக்கு போட்டியாக வரும் உருளைக்கிழங்கு !! அதிர்ச்சியில் பொதுமக்கள்

வெங்காயத்துக்கு போட்டியாக வரும் உருளைக்கிழங்கு !! அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயம் வர்த்தகம் குறைந்ததன் காரணமாக விலை உயர்வு அதிகரித்து வந்த நிலையில், தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் ரூபாய்.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. … Read more

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டு வருவதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து நிறுத்தப்பட்டதால் இந்த விலை ஏற்றம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை சீராக்க வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 45-க்கு வியாபாரம் … Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில … Read more

புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளில் விவரங்கள் குறித்து  தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பிடிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கீழ் இயங்கி வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளின் மாவட்ட வாரியான விபரங்கள் ; காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), … Read more