45 நாளில் நடைமுறைக்கு வரும் – டிரம்ப்

45 நாளில் நடைமுறைக்கு வரும் - டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று கூறினார்.

அமெரிக்கா இரங்கல்

அமெரிக்கா இரங்கல்

கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 173 பேர்  படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் தெரிவித்துள்ளது.

சிக்கி தவிக்கும் பிரேசில்

சிக்கி தவிக்கும் பிரேசில்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் … Read more

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள்  கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நடந்த வெடிப்பில் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில்  150 பேர் இறந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த நிலையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லெபனானுக்கு பல்வேறு வகைப்பட்ட உதவிகள்  சேர்ந்தவண்ணம் உள்ளன. இந்த வெடி விபத்தானது மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமானது.

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த மனு அமெரிக்காவின் உள்ள  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கனாடா எல்லைப்படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெறும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.  இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்  அனைத்தும் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் … Read more

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு  பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். ஆனால் அவர் போலீஸ் என்னை துன்புறுத்தியதால் தான் பழியை ஏற்றுகொண்டடேன் என்று கூறினார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க … Read more

சோமாலியாயில் சோகம்

சோமாலியாயில் சோகம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு  மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி (வயது 73). இவர் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.  உள்நாட்டுப் போரால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கினார். 2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர். ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட … Read more