ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

0
69
உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெறும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.  இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்  அனைத்தும் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
author avatar
Parthipan K