2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது.  இந்த நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்தானது  இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு  ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. ஏப்ரல் மாதக் கணிப்பில் … Read more

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. இந்த விண்கலம் பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை  ஒரு வருடம் வரை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் எனில் பூமியில் 687 நாட்களாகும். இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மையையும், செவ்வாயில் மனிதன் … Read more

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில்  தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர்  கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை  பெசாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில்  தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார். தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக் கொண்டே கொன்றுள்ளார். அவரது பெயர் காலித் என தெரியவந்துள்ளது, அந்த இடத்திலேயே கைதும் செய்யப்பட்டு  நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வந்தது எப்படி என போலீசார் … Read more

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக  அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. காணொலி மூலமாக நடந்த விசாரணையின் போது 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின்  பெரு நிறுவனங்கள்,  சிறு நிறுவனங்களை தங்களது வளர்ச்சிக்காக முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிக்கப்படுவதாக புகார் கூற்ப்பட்டது.  ஆனால், ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் மற்றும்  ஆகிய நிறுவனங்கள் இந்த … Read more

இன்று என்ன தினம் தெரியுமா?

tiger

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி அன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். ராஜபாளையத்தை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாக கொண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் தற்போது புலிகளின் கணக்கெடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 ஆம் தேதி  இன்று புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் நிலையில் இந்த சரணாலயத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் … Read more

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது  அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிரபல மருந்து நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம்

பிரபல மருந்து நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம்

பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றை உருவாக்குகின்றன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலத்துக்குள் இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தை  பெற்று விடலாம் என இந்த மருந்து நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இவ்விரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பற்றி இங்கிலாந்து வர்த்தக … Read more

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 196 பேர் பலி. இதனால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக  அதிகரித்து வருகிறது.  இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

நேப்பாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்துள்ளனர். 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் … Read more