கூட்டணி அமைக்க உள்ள இந்தியா-ஜப்பான்! சீனாவை புறக்கணிக்க உலக நாடுகள் செய்த மாஸ்டர் பிளான்!

கூட்டணி அமைக்க உள்ள இந்தியா-ஜப்பான்! சீனாவை புறக்கணிக்க உலக நாடுகள் செய்த மாஸ்டர் பிளான்!

ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் ஜப்பானில் சந்திக்க இருக்கின்றனர். இந்த சந்திப்பில் 5ஜி மற்றும் 5G பிளஸ் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஜப்பானின் புதிய பிரதமராக யோசி ஹைட்  சுகா அண்மையில் பதவி ஏற்றார். பிரதமர் நரேந்திர மோடி இவருடன் தொலைபேசியில் பேசியபோது இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு உறவை உலக அரங்கில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு  எடுத்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உதவியுடன் 5ஜி … Read more

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்!

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்!

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்! தென் ஆப்பிரிக்காவின் நாட்டில் போட்ஸ்வானாவில் விஷம் கலந்த நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் அங்கு உள்ள மக்களை அதிர செய்துள்ளது. போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்களின் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, விஷம் உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக … Read more

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ மெக்ஸிகோஎல்லை வரை பரவியுள்ளது. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று டிரம்ப் நம்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், … Read more

இவ்வளவு டாலரில் தயாரித்த முகக் காப்பா?

இவ்வளவு டாலரில் தயாரித்த முகக் காப்பா?

பிரெஞ்சு நிறுவனமான Louis Vuitton, 1,300 வெள்ளி விலையில் முகக் காப்பு ஒன்றை வெளியிடத் திட்டமிடுகிறது. முகக் காப்பின் இறுதி விலை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அந்தத் தனிநபர் பாதுகாப்புச் சாதனம் 2021 Cruise Collection தொகுப்பில் இடம்பெற்றது. LV சின்னத்துடன் சிறு தங்கப் பொத்தான் பதிக்கப்பட்டுள்ளது. இழுக்கக்கூடிய பட்டைவாரை தலையைச் சுற்றிப் போட்டு கொள்ளலாம் முகக் காப்பைத் திருப்பியும் போட்டுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது, கண்களைச் சூரிய ஒளியிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் பாதுகாக்கலாம்.

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது; கிட்டத்தட்ட 9.5 லட்சம் பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், ஐரோப்பாவில் கிருமித்தொற்று அபாயகரமான வேகத்தில் பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சில நாடுகள் தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைப்பதற்கு எதிராக அது கருத்துரைத்தது. கடந்த 2 வாரங்களில் பாதிக்கும்-மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்று உறுதியாவோர் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும்-மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 6.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்

உலக வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் பேசும்போது கிருமிப்பரவலிலிருந்து உலகப் பொருளியல் மீண்டும் வர எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும் என்று அதிர்ச்சி தகவல் கூறினார். கொரோனா கிருமிப்பரவலால் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை ஒருசில நாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் என்ற திருமதி ரெய்ன்ஹார்ட், வசதி குறைந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்றார். அதன் விளைவாக, சமுதாய ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

ஐரோப்பாவில் கிருமித்தொற்று தீவிரமடைந்து வருவதாக, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் நிறுவனம் கவலை தெரிவித்தது. இந்த மாதம் ஐரோப்பில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்ப்பரவல் சம்பவங்கள், உலகமக்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் கூறினார். உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் … Read more

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயின் புகை ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்துள்ளது. புகை பரவுவதை துணைக்கோளத் தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஆரெகன் ஆகிய மாநிலங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியிருப்பதால் புகையின் அளவு அதிகரித்துள்ளது. அது சுமார் 8,000 கிலோ மீட்டர் தாண்டி ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நாடுகளை அடைந்துள்ளது.  

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

காடுகள் அழிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாகத் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக மொத்த நிலப்பரப்பில் காடுகளின் விகிதம் 2000ஆம் ஆண்டில் 31.9 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 31.2விழுக்காடாக உள்ளது. உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டதை அது குறிப்பதாக உணவு வேளான்மை அமைப்பு தெரிவித்தது. சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டன.  

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

நோய்ப்பரவல் காலத்தில் விமானப் பயணங்கள் குறித்த அச்சத்தால் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஏர்வேஸ்  நிறுவனம், அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் விமானச்சேவையில் 25 விழுக்காடு மட்டுமே இயங்குவதால் பல்லாயிரம் வேலைகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாய் அவர் கூறினார். நிறுவனத்தின் 100 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான நெருக்கடி இது என்று குறிப்பிட்ட திரு அலெக்ஸ், நிறுவனத்தைக் … Read more