சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்!

0
87
Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!
Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்!

சேலத்தில் மகளை விஷம் கொடுத்துக் கொன்ற நூலகர், பின் தானும் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். 50 வயதான இவர் சேலம் மத்திய நூலகத்தில் உள்ள பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மூன்றாவது மகள் ஹரிஷ்காவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தியாகராஜனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது, அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடையும் விதமாக இருந்தது. ஏனெனில் தியாகராஜனும் ஹரிஷிகாவும் வாயில் நுரை தள்ளியபடி, மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். எனவே தந்தை மகள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் ஹரிஷிகா பரிதாபமாக உயிர் இழந்தார்.

தியாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் போது, தியாகராஜனுக்கு ரேவதி என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2 மகள் மற்றும் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், அவர்கள் வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர் மனைவி மற்றும் மூன்றாவது மகளுடன் வசித்து வந்தார்.

ஹர்ஷிதா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் குணமாகவில்லை என்ற காரணத்தால் யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்று அவர் அவ்வப்போது புலம்பிய தாகவும் தெரிவித்தனர். தனக்குப் பின்னால் மகளை யார் கவனிப்பார்கள் என்று அவர் இந்த முடிவுக்கு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தியாகராஜனின் மனைவி வெளியூர் சென்று இருந்ததன் காரணமாக தியாகராஜன் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் வாங்கி வந்து, இரவில் மகளுக்கு கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.