குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. சுந்தர் சி-யை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்ன குஷ்பு!!

0
537
There is no chance of having a child.. Khushbu asked Sundar C to marry someone else!!
There is no chance of having a child.. Khushbu asked Sundar C to marry someone else!!
குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. சுந்தர் சி-யை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்ன குஷ்பு!!
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை. எந்த அளவிற்கு என்றால் முதல் முறையாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு பிரபலமான நடிகை. அந்த அளவிற்கு தனது வசீகரமான அழகால் 90களில் ஏராளமான ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்தார். இப்போதும் குஷ்பு அதே அழகை மெயின்டென் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு முதன் முதலில் வருஷம் பதினாறு என்ற படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் அவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதன் பின்னர் பிரபு உடன் இணைந்து சின்னத்தம்பி படத்தில் நடித்தபோது தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் பிரபு மற்றும் குஷ்பு இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் அந்த படமும் ஹிட்டானது.
மும்பையை சேர்ந்த குஷ்பு தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கியதால் வெகு விரைவிலேயே தமிழ் பேச கற்று கொண்டதோடு சொந்த குரலிலும் டப்பிங் செய்து அசத்தினார். ஒரு வருடத்தில் மட்டும் குஷ்பு நடிப்பில் பத்து படங்கள் வரை வெளியானது. அந்த அளவிற்கு பிசியான நடிகையாக வலம் வந்தார்.
பின் திருமணம் குழந்தைகள் என செட்டிலான குஷ்பு நடிப்புக்கு பிரேக் விட்டார். அப்படியே நடிப்பில் இருந்து அரசியலுக்கு சென்ற அவர் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார். ஆனால் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக கட்சியை விட்டு விலகி இப்போது பாஜகவில் இணைந்து பிசியாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.
இதற்கிடையில் குஷ்புவின் கணவர் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில அதிர்ச்சியான விஷயங்களை கூறியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை குஷ்புவிற்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டதாம். அந்த சமயத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்கள். இதனால் குஷ்பு மிகவும் மனமுடைந்து விட்டாராம்.
அதை நினைத்து நினைத்து கண்ணீர் விட்டு அழுவாராம். அதுமட்டுமின்றி நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சுந்தர் சி யிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை மறந்து வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் அவர்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் இரண்டு அதிர்ஷ்ட தேவதைகள் பிறந்ததாக மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார்.