டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள்! இந்தியாவின் பவீனா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

0
95

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 162 நாடுகள் மற்றும் 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெற்றது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்றைய தினம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா படேல் அமர்ந்த நிலையில் ஜாய்ஸ்டி ஒலிவியராவுடன் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதிப் இறுதிப்போட்டிக்கு தகுதி அடைந்திருக்கிறார்.