டெல்லி டிராக்டர் பேரணியில் வெடித்தது கலவரம்! ஒருவர் பலி!

0
193

தலைநகர் டெல்லியில் எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் செல்வதற்கு முயற்சி செய்தபோது அங்கு காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் உண்டான தகராறில் விவசாயி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். மத்திய அரசு அறிமுகம் செய்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். சென்ற இரண்டு மாதங்களுக்கு மேல் தலைநகர் புது தில்லியில் முற்றுகையிட்டு அங்கு எல்லையிலே விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினமான இன்றைய தினம் டிராக்டர் பேரணி நடத்த இருக்கிறோம் என்று முன்னரே விவசாயிகள் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது அவளுடைய போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி கொடுத்ததுடன் , குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பிறகு 12 மணிக்கு பிறகு இந்த அணிவகுப்பை நடத்துமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.

இருந்தாலும் குடியரசுதினவிழா அணிவகுப்பானது ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விவசாயிகளின் டிராக்டர் அணி வகுப்பு ஆரம்பமானது. விவசாயிகள் இன்றைய தினம் காலை திடீரென்று செங்கோட்டை பகுதிக்குள் நுழைவதற்கு முயற்சி செய்தார்கள். காவல்துறையினர் அவர்களை தடை செய்தும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தடுப்புச் சுவர் மீது மோதி அதனை தகர்த்தெறிந்து விட்டு விவசாயிகள் டிராக்டர்கள் உடன் கோட்டைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். டெல்லி ஐஓடி என்ற இடத்தில் விவசாயிகள் நுழைய முயற்சித்த போது அங்கே காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் ,இடையில் மோதல் உண்டானது அந்த சமயத்தில் விவசாயிகள் டிராக்டர்கள் உடன் காவல்துறையினரை எதிர்கொள்ள முயற்சி செய்தார்கள் . அந்த சமயத்தில் அங்கே இருந்து பின்வாங்கிக் கொண்ட காவல்துறையினர், அருகே இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கு சென்று அங்கிருந்து விவசாயிகள் கண்ணீர் புகை குண்டுகளை எறிய ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் காவல் துறையினர் மீது கற்களை வீசி வாகனங்களை சூறையாடி விட்டதாகவும், காவல்துறையினர் விவசாயிகள் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

விவசாயிகள் அனைவரும் டெல்லியின் ஐபிஓ என்ற இடத்திற்கு படையெடுத்த காரணத்தால், அந்தப் பகுதியில் மிகக் கடுமையான நெரிசல்கள் உண்டானது. அவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகம் செய்து நடவடிக்கை எடுத்தனர். அப்பொழுது அந்தப் பகுதியிலே ஒரு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் டிராக்டரை ஓட்டி வந்த விவசாயி நவ்நீத் சிங் அந்த இடத்திலேயே அந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி என்பது தெரியவந்திருக்கிறது. காவல்துறையினர் விவசாயிகளின் மீது பிரயோகம் செய்த தடியடியில் 3 விவசாயிகளின் மண்டை உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பலமான காயம் அடைந்து இருக்கிறார்கள். அருகே இருக்கின்ற மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!
Next articleகுடியரசு தினவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற பங்களாதேஷ் ராணுவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here