“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

0
205
#image_title

“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

குடலில் தேங்கி கிடக்கும் மலத்தால் வயிறு உபாதைகள் ஏற்படும். தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றி உடலை ஆரோக்கியமான வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

*மஞ்சள்
*ஏலக்காய்
*தண்ணீர்

சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் 1/4 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 ஏலக்காய் விதையுடன் தட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்துள்ள மஞ்சள் 1/4 ஸ்பூன் அளவு மற்றும் 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் குடல் பகுதியில் தேங்கி கிடந்த மலம் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

*மஞ்சள்
*ஏலக்காய்
*விளக்கெண்ணெய்

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் மஞ்சள், 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.