நோய் நொடி இன்றி வாழ இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

0
138
#image_title

நோய் நொடி இன்றி வாழ இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

இன்றைய உலகில் நோயின்றி வாழ்வது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு உணவுமுறை, வாழ்க்கை முறை முக்கிய காரணங்கள் ஆகும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றால் பல நோய்கள் எட்டி பார்க்க ஆரம்பித்து விடும். நோய் நம் உடலில் ஆண்டக் கூடாது என்றால் நாம் சில இயற்கை வைத்தியத்தை பின்பற்றுவது நல்லது.

*இஞ்சி
*தேன்

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி சேர்த்து கலந்து சாப்பிடவும்.

*சுண்ணாம்பு
*சுக்கு

அடுத்த படி 1 துண்டு சுக்கில் சுண்ணாம்பு தடவி தோசை கல்லில் போட்டு வறுக்கவும். பிறகு தோலை சீவி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கவும். இதை 1 கிளாஸ் வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

*கடுக்காய்

இறுதியாக ஒரு கடுக்காயை தோல் நீக்கி விதையை இடித்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை 1 கிளாஸ் வெந்நீரில் கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.