நான் யார் குடும்பத்தையும் பிரிக்கல.. திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த வரலட்சுமி!!

0
117
Varalakshmi explained the controversies about marriage
Varalakshmi explained the controversies about marriage
நான் யார் குடும்பத்தையும் பிரிக்கல.. திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த வரலட்சுமி!!
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் தவிர்த்த அவர் போடா போடி படம் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் தான் ஹீரோயினாக நடித்தார். இவருக்கு ஹீரோயின் கேரக்டர் பெரிதாக செட்டாகவில்லை. அதனால் சற்றும் யோசிக்காமல் வில்லி குணச்சித்திரம் போன்ற வேடங்களில் இறங்கி விட்டார். அந்த வகையில் இவர் வில்லியாக நடித்த படங்கள் தான் நல்ல வரவேற்பை பெற்றன.
சமீபத்தில் கூட தெலுங்கில் ஹீரோவின் அக்காவாக வரலட்சுமி நடித்த ஹனுமான் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிக்கோலய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதால் வரலட்சுமி தான் அவர் மனைவியை பிரித்தார் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “நான் 14  ஆண்டுகளுக்கு முன்பே நிகோலாயை ஒரு ரெசார்ட்டில் சந்தித்துள்ளேன். அப்போது எங்களுக்குள் வெறும் நட்பு மட்டும் தான் இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு சந்திக்கும் போதுதான் எங்களுக்குள் புரிதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நிகோலாய் அவர் மனைவியை பிரிந்து  தனியாக தான் இருந்தார். நான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது ஒன்றும் தவறில்லையே. என் அப்பா கூட இரண்டாவது திருமண வாழ்க்கையில் தான் இருக்கிறார். அதுபோல தான் நிகோலாய். அவர் மனைவிக்கும் அவருக்கும் செட்டாகவில்லை பிரிந்து விட்டார்கள்.
அதேபோல நிகோலாய் மகள் மிகவும் திறமைசாலி. 15 வயது குழந்தைக்கு இருக்கும் அறிவை விட அபரிமிதமாக இருக்கும். அதனால் தான் மூன்று நாடுகளில் பல பதக்கங்களை வாங்கி உள்ளார். அவர் ஒரு விளையாட்டு வீராங்கனை. என்னிடம் நன்றாக பழகி வருகிறார். நிகோலாய் பசங்களுக்காக தான் நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம்” என கூறியுள்ளார்.