முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

0
76
#image_title

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

இன்று 30 வயதை கடந்து விட்டாலே வயதான தோற்றம் வந்து விடுகிறது.இதற்கு நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் காரணம்.நம் பாட்டி காலத்தில் 50 வயதை கடந்தால் தான் வயதான தோற்றம் தென்படும்.ஆனால் இன்றைய உலகம் அப்படி அல்ல.

இந்த இளம் வயது முதுமையில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை பின்பற்றி வரவும்.

1)ஆவாரம் பூ
2)பன்னீர்
3)ரோஜா இதழ்
4)பச்சை பயறு

ஒரு கப் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ஆவாரம் பூவை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.இவை இரண்டும் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் தலா 50 கிராம் அளவு பொடியாக வாங்கிக் கொள்ளவும்.

அதன் பின்னர் 1/2 கப் பச்சை பயறை நன்கு அரைத்து ஒரு ஜல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.இதை ஆவாரம் பூ + ரோஜா இதழ் பொடியில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த பொடியை ஈரமில்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் தயாரித்த பொடி 3 தேக்கரண்டி அளவு சேர்த்து 5 தேக்கரண்டி பன்னீர் ஊற்றி நன்கு பேஸ்டாக்கி உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கி மிருதுவாக இருக்கும்.