இதன் மூலமும் ஏமாற்றலாம்! துணிகளின் மூலம் 2 கோடி வரை ஏமாற்றிய தம்பதி!

0
74
You can be deceived by this too! Couple cheated up to Rs 2 crore through clothes!
You can be deceived by this too! Couple cheated up to Rs 2 crore through clothes!

இதன் மூலமும் ஏமாற்றலாம்! துணிகளின் மூலம் 2 கோடி வரை ஏமாற்றிய தம்பதி!

ஏமாற்ற நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். நல்லவர்கள் போலேயே நடித்து வாங்கிய துணிகளுக்கு பிறகு பணம் கொடுக்கிறேன் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று நம்பவைத்து ஒவொருவராக ஏமாற்றி துணிகளை வாங்கி உள்ளனர் என்றால் அவர்களை எல்லாம் என்ன சொல்வது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மொத்தமாக ரெடிமேட் துணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனு மூலம் அவர் கடந்த 2009ஆம் ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி விஜயநிர்மலா என்ற இருவரும்  என்னுடைய கடைக்கு வந்தார்கள்.

40 மற்றும் 41 வயதுடைய இவர்கள் துணி கடை நடத்தி வருவதாகவும், அவர்களின் கடைகளுக்கு ரெடிமேட் துணிகள் சப்ளை செய்யும் படியும் கேட்டனர். அதன்படி நானும் ஒன்றரை கோடிக்கு ரெடிமேட் துணிகளை அவர்களுக்கு சப்ளை செய்தேன். ஆனால் எண்பத்தி மூன்று லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர்.

இதேபோல் அவர்கள் 11 துணி வியாபாரிகளிடம் துணிகள் வாங்கி 2 கோடி வரை மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து மணிகண்டனும் அவரது மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டனர்.