இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

0
74
The Central Government has denied the allegation that Indian assets are frozen!
The Central Government has denied the allegation that Indian assets are frozen!

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

பிரான்சில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான 20 க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தது.

அதில் அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதிவரைக்கும் கணக்கீட்டின் படி வட்டி தொகையையும் சேர்த்து மொத்தம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்திய அரசு தர வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியா தொகையை திருப்பித் தராத பட்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்களை முடக்குவதற்கான நீதிமன்றத்தின் உத்தரவை அந்த கெர்ய்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிளாட்கள் எனவும் அவற்றின் மதிப்பு மட்டும் 20 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி இந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம் இந்தியாவிற்கு சொந்தமான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டதாகவும், அன்று மாலையே அதற்கான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் தெரிவித்தது.

ஆனால் பிளாட்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் எண்ணம் அந்நிறுவனத்துக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அந்த சொத்துக்களை இந்திய அரசால் விற்க முடியாது எனவும் கூறப்படுகிறது. பிரான்சில் சுமார் 20 இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும், உத்தரவும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கவில்லை என கூறிவிட்டது.

மேலும்  அரசாங்கம் உண்மைகளை அறிய முயற்சிக்கிறது. அத்தகைய உத்தரவு கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கவும், அதன் ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றும் நிதி அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு செய்து நீதிமன்றத்தில் டிசம்பர் 2020 சர்வதேச நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து அரசு ஏற்கனவே கடந்த மார்ச் 22 அன்று ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்திய அரசு தனது வழக்கை தீவிரமாக கவனிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கெர்ய்ன் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகளுக்கான இந்திய அரசை அணுகிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.