பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! 

0
64
#image_title

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!!

பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருது, விக்ரம், அன்பறிவு, பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் நடிகர் இயக்குநர் மாரிமுத்து அவர்கள் கண்ணும் கண்ணும், புலிவால் என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். மறைந்த நடிகர் , இயக்குனர் மாரிமுத்து அவர்கள் ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இயக்குனர் மணிரத்தினம் , வசந்த் சீமான் , எஸ் ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2011 மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராக மாரிமுத்து அறிமுகமானார்.

தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் சிரீயலில் டப்பிங் பேசிக் கொண்டிருந்த பொழுது நடிகர் மாரிமுத்து அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நடிகர் மாரிமுத்து அவர்கள் உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் நீச்சல் தொடரில் “இந்தாம்மா ஏய்” என்ற டயலாக் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தி அறிந்த ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தாம்மா ஏய் என்ற டயலாக்கை இனிமேல் கேட்க முடியாது என்ற வருத்தத்தில் தற்பொழுது ரசிகர்கள் உள்ளனர்.