பயமா இருக்கு அம்மா!! கதறிய குழந்தைகள்! குட்டையில் கிடந்த 3 சடலம்!

0
60

பெண்ணொருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 குழந்தைகளை குட்டையில் போட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரம் அடுத்த சி. ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு குட்டையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 குழந்தை மற்றும் அந்த பெண்ணின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணையை தொடங்கிய போலீசார், அந்தப் பெண் யார் என்றே தெரியவில்லை என்ற பதில் தான் வந்துள்ளது. இதனையடுத்து மேலும் விசாரித்த போலீசார் அங்கு ஒரு இரு சக்கர வாகனம் ஒன்று நின்றுள்ளது.

 

அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்த பெண் பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா என்றும் மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது. கிஷோர்குமார், நீரஜா ஆகிய தம்பதிகள் 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.

 

5 ஆண்டுகளுக்கு முன்னர் நீரஜாவின் பெற்றோர் இறந்து போய் உள்ளனர். இதனால் தந்தையின் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு கிஷோர் குமாரும், அவரது உறவினர்களும் தொந்தரவு செய்து உள்ளனர். இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

 

இதனால் மனமுடைந்த நீரஜா, குழந்தைகளை குட்டையில் போட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும், இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Kowsalya