ஒரே நேரத்தில் 9 காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல்.. உயிருக்கே ஆபத்து – கதறும் சவுக்கு சங்கர்!! 

0
871
9 police officers attacked at the same time - Chavku Shankar
9 police officers attacked at the same time - Chavku Shankar

ஒரே நேரத்தில் 9 காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல்.. உயிருக்கே ஆபத்து – கதறும் சவுக்கு சங்கர்!!

அரசியல் ரீதியாக தனது விமர்சனங்களை சமூக ஊடகங்களில் கூறி வந்த சவுக்கு சங்கரை பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு சைபர் கிரைம் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்த அடுத்த ஒரு சில தினங்களிலேயே அவர் மீது பெண் வன்கொடுமை எனத் தொடங்கி கஞ்சா வழக்குகள் என ஆறு வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இவர் கைது செய்யப்பட்டதற்கு ஆளும் கட்சி தான் முக்கிய காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். திமுக நிர்வாகிகள் செய்து வரும் அவதூறுகள் குறித்து இவர் வெளிப்படையாக கூறியதனால் இந்த விளைவை சந்திக்க நேரிட்டது என்றும் பலர் தங்களது கருத்தை தெரிவிக்கின்றனர். அதற்கேற்றார் போல தான் இவரை கைது செய்து அழைத்துச் செல்லும் பொழுது வேன் விபத்து, சிறைச்சாலையில் இவரை காவலர்கள் தாக்கியது என பல செயல்களும் இதற்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இவர் மீதுபோடப்பட்ட வழக்கு விசாரணைக்காக மதுரையில் உள்ள நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்டார். அந்த விசாரணையில் கோவை மாவட்ட சிறைச்சாலையில் தன்னை 10 பேர் கொண்ட காவல் அதிகாரிகள் தாக்கியதாக கூறியுள்ளார். மேற்கொண்டு எனக்கு சிறைச்சாலையை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வேறு சிறைக்கு மாற்ற தனக்கு அதிகாரம் இல்லை என்றும் இதனை நீங்கள் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்து மாற்றிக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு சவுக்கு சங்கர் தாயார் அவர்களும் தன் மகனின் உயிருக்கு கோவை சிறையில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அதில், தனது மகனை மாற்று சிறைக்கு அனுப்ப கோரி சிறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலனை செய்யும்படி உத்தரவிடுமாறும் கேட்டுள்ளார்.அதேபோல இப்பொழுது தான் மகன் மீது தாக்குதல் நடத்தியது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்த நிலையில், மாற்று சிறைக்கு அனுப்புவது குறித்து நீதிமன்ற அதிகாரிளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலனை செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அதற்க்கு காலக்கெடுவாக 2 வாரம் கொடுத்துள்ளனர்.மேலும் சவுக்கு சங்கர் தாக்கியது குறித்து முன்னதாகவே விசாரணை செய்யப்பட்டு விட்டதாகவும், மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க தேவையில்லை எனக் கூறி உத்தரவிட்டுள்ளனர்.