பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களுக்கு இடம்

0
81

சண்டிகர்: பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 10 பேரில் 8 பேர் முதல் முறையாக எம்எல்ஏக்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பஞ்சாபி மொழியில் உறுதிமொழி ஏற்றனர்.

ஹர்பால் சிங் சீமா, ஹர்பஜன் சிங், டாக்டர் விஜய் சிங்லா, லால் சந்த், குர்மீத் சிங் மீத் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் மற்றும் அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் டாக்டர் பல்ஜித் கவுர் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. . அமைச்சரவையில் முதல்வர் உட்பட 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் முதல்வராகப் பதவியேற்ற பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநர் புதன்கிழமை பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம்-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி மற்றும் பிஜேபி-பஞ்சாப் லோக் காங்கிரஸ்-எஸ்ஏடி (சன்யுக்த்) கூட்டணியை வீழ்த்தியது.