நிச்சயத்திற்கு முன் காதலனுடன் சென்ற மகள்.. பெற்றோர் செய்த விபரீத செயல்..!

0
198

நிச்சயத்திற்கு முதல் நாள் மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வேளங்கிபட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி. இவருக்கு 19 வயது மகள் ஒருவர் உள்ளார். அவரது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, அவருக்கு பெரியாண்டிகுளத்தை பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் முடிவு செய்த பெற்றோர் வருகின்ற 20ம் தேதி அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்த அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி கல்லூரி சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கதில் தேடினர். அப்போது அந்த பெண் இரண்டு ஆண்டுகளாக பால்ராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரியவந்தது.திருமணத்தை மறுத்த அவர் காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதும் தெரியவந்தது.

நிச்சயத்திற்கு முன் மகள் காதலனுடன் சென்று விட்டதால் அவமானம் அடைந்த அவரது பெற்றோர் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.