நாள்பட்ட மலக் கழிவுகள் 1/2 மணி நேரத்தில் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
121
#image_title

நாள்பட்ட மலக் கழிவுகள் 1/2 மணி நேரத்தில் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

தற்காலத்தில் அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு துரித உணவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது நல்லது. அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் அவை மலச்சிக்கல் பாதிப்பாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படக் காரணம்:-

*போதிய தண்ணீர் அருந்தமை

*எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல்

*மலத்தை முறையாக கழிக்காமல் இருத்தல்

*மலத்தை அடக்கி வைத்தல்

*மன அழுத்தம்

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*சுக்குப் பொடி – 1/4 தேக்கரண்டி

*ஓமம் – 1/4 தேக்கரண்டி

*ஜீரா (சீரகம்) – 1/4 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி ஜீரா (சீரகம்) சேர்த்து கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள ஓமம் மற்றும் சீரகத்தை தண்ணீரோடு ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

அடுத்து 1/4 தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் பொழுது பருகவும். இவ்வாறு செய்து பருகினால் அடுத்த 2 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த கழிவுகளும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை ஒரு காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.

பின்னர் அதை வெந்தயம் வைத்துள்ள பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து 3 கருப்பு மிளகு எடுத்து உரலில் போட்டு தட்டி கொள்ளவும். அதேபோல் சீரகம் 1/4 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து தட்டி ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெந்தயத்தில் சேர்த்து கொள்ளவும்.

பிறகு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும். இதையடுத்து 1 தேக்கரண்டி விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி வெறும் வயிற்றில் பருகவும். இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் உடனடியாக வெளியேறி விடும்.