தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

0
103
#image_title

தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

நம்மில் பலர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம். நம் தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

*உடல் பருமன்

*முதுமை

*எலும்புகளில் அடிபடுதல்

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி

*சுக்கு – 1 துண்டு

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும்.

அடுத்து ஒரு துண்டு சுக்கை எடுத்து ஒரு உரலில் போட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும். இந்த சுக்கு துளை எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இதை மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும் இடங்களில் தடவி நன்கு மஜாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி சில நாட்களில் சரியாகி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*தூயத் தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*சூடம் – 1

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் 1 சூடத்தை சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்து கொள்ளவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தேவையான அளவு எடுத்து மூட்டு பகுதிகளில் ஊற்றி மஜாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு விரைவில் சரியாகும்.