பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

Photo of author

By Janani

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

Janani

இந்த உலகத்தில் பல்லிகள் இல்லாத வீடே இல்லை என்று தான் கூற வேண்டும். வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது விழுவது இயற்கையானதுதான். ஆனால் ஜோதிட சாஸ்திரங்கள் படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதால் பல்லி விழுந்த இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர்.

பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது. அது தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பக்கிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோன்று நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.

பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும். நாம் ஒரு செயலை செய்ய செல்லும் பொழுது, நம் மீது பல்லி விழுந்து விட்டால் அதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த பல்லி விழும் பலன்கள் வைத்து, நாம் செய்யக்கூடிய செயல்களுக்கான பலனை அறிந்து கொள்ளலாம்.

பல்லி விழும் பலன்களுள் நல்ல பலன்களும் உண்டு, கெட்ட பலன்களும் உண்டு. நல்ல பலன்கள் வரும் பொழுது, நாம் முடிவு செய்த செயலை செய்து கொள்ளலாம். ஆனால் கெட்ட பலன்கள் வரும்பொழுது நாம் செய்யக்கூடிய செயலை சற்று நிதானமாக யோசித்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.