1. மகாலட்சுமி தாயார் அமர்ந்த நிலையில் உள்ள படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
2. நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நான் அணைக்க கூடாது.
3. கோவிலின் உள்ளே செல்லும் பொழுது கோவிலின் பிரதான வாயில் வழியே தான் உள்ளே நுழைய வேண்டும். வேறு வாயிலின் வழியாக கடவுளை காண உள்ளே நுழையக்கூடாது.
4. கடவுளுக்கான அர்ச்சனை பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்து தான் கை, கால்களை கழுவ வேண்டும். ஆனால் குளிக்கக் கூடாது.
6. எலுமிச்சை பழத்தில் ஏற்றக்கூடிய தீபத்தை வீடுகளில் ஏற்றக்கூடாது. கோவில்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.
7. சுவாமிக்கு எடுக்கக் கூடிய ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக்கூடாது. மனிதர்களுக்கு எடுக்கக்கூடிய ஆரத்தியில் மட்டுமே சுண்ணாம்பு சேர்க்க வேண்டும்.
8. சனிபகவானுக்கு என எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது. ஆலயங்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.
9. ஏதேனும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு முடிவு எடுக்க வேண்டும் என்றால், இறைவன் சன்னதி மற்றும் தெய்வீக அலை உள்ள இடங்களில் அமர்ந்து யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
10. நல்ல காரியங்களைப் பற்றி பேசும் பொழுது எள் மற்றும் எண்ணெய் குறித்த விஷயங்களை பேசக்கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
11. ருத்ராட்சம் அணிந்திருப்போர் இறுதிச் சடங்குகளுக்கு செல்லும் பொழுது அதனை கழற்றி வைத்துவிட்டு தான் செல்ல வேண்டும்.
12. கோவில் மூடி இருக்கும் பொழுதும், சுவாமி அலங்காரத்தின் பொழுது திரை மூடி இருக்கும் பொழுதும் கடவுளை வணங்கக் கூடாது.
13. கோவிலில் தீப ஆராதனை காட்டும் பொழுது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.
14. பெண்கள் மாதவிலக்கின் போது எக்காரணம் கொண்டும் தலையில் பூ வைக்க கூடாது.
15. செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கை சுத்தம் செய்யக் கூடாது.
16. இறந்த முன்னோர்களின் படங்களை சுவாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
17. பூஜை அறையில் தெய்வங்களின் படத்தை வடக்கு பார்த்தவாறு வைக்கக் கூடாது.
18. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படத்தை, விக்கிரகத்தை அல்லது காலண்டரை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. பசுவுடன் அல்லது ராதையுடன் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்குமாறு இருக்கக்கூடிய கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
19. கர்ப்பிணி பெண்களோ அல்லது அவரது கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.
20. சிங்கம், புலி, கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை வீடுகளில் வைப்பதன் மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கும்.