அமித்ஷாவை பார்க்கணும்!.. ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்!. கெஞ்சினாரா ஓபிஎஸ்?!…

Photo of author

By அசோக்

அமித்ஷாவை பார்க்கணும்!.. ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்!. கெஞ்சினாரா ஓபிஎஸ்?!…

அசோக்

ops

ஜெயலலிதா கருணையால் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.வின் மறைவுக்கு பின்னரும் சசிகலா இவரையே முதல்வராக நியமித்தார். எனவே, கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக சொல்லி இவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார் சசிகலா. அந்த கோபத்தில் ஜெ.வின் சமாதியில் போய் அமர்ந்து தியானம் செய்தார் ஓபிஎஸ்.

அதன்பின் செய்தியாளர்களிடம் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என பேட்டி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். மேலும், ஜெ.வின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தர்ம யுத்தம் துவங்கினார். ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துவிட்டு சிறைக்கு போய்விட்டார் சசிகலா.

பழனிச்சாமி, ஓபிஎஸ் என அதிமுக இரண்டாக பிரிந்தது. அதிமுகவை ஒருங்கிணைத்து அதை பாஜகவுடன் கூட்டணி போட வைக்க வேண்டும் பாஜக மேலிடம் விரும்பியது. எனவே, மோடியும், அமித்ஷாவும் எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் நடந்துகொண்டது பிடிக்காமல் அவரை கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தனது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிச்சாமி.

ops

எனவே, தனித்து விடப்பட்டார் ஓபிஎஸ். அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாத புரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக தோற்க காரணமாக இருந்தார். அதன்பின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் விட பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். பழனிச்சாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் இருக்கிறார் அமித்ஷா.

இந்நிலையில், சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எப்படியாவது சந்திக்க முயற்சிகளை எடுத்து வருகிறார் ஓபிஎஸ். பிஜேபி தமிழக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தின் பி.ஏவை காலை 6 மணிக்கே அழைத்து எப்படியாவது அமித்ஷாவை பார்க்க வைத்து விடுங்கள். நாளை மாலை குருமூர்த்தி வீட்டுக்கு அமித்ஷா வரும் போதாவது பார்க்க வையுங்கள்’ என்று ஓபிஎஸ் கெஞ்சியிருக்கிறார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் டிவிட் செய்திருக்கிறார்.

அமித்ஷா மூலம் பழனிச்சாமியிடம் பேசி மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பன்னீர் செல்வத்தின் நோக்கம் என கருதப்படுகிறது.