தீவிரவாதிகளுடன் போராடி உயிரை விட்ட குதிரை சவாரி தொழிலாளி!.. நெகிழ்ச்சி சம்பவம்..

Photo of author

By அசோக்

தீவிரவாதிகளுடன் போராடி உயிரை விட்ட குதிரை சவாரி தொழிலாளி!.. நெகிழ்ச்சி சம்பவம்..

அசோக்

syed

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தன் கண் முன்னே அப்பாவிகள் சுடப்படுவதை கண்டு பொறுக்க முடியாமல் அப்பகுதியில் குதிரை சவாரி செய்யும் தொழிலாளியான சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் கொஞ்சம் யோசிக்காமல் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது தீவிரவாதீகள் சுட்டதில் சையதுவும் பலியானார்.