தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, புத்தகம், காலை உணவு திட்டம், கல்வி உதவித்தொகை , இடைநிற்றலை குறைப்பதற்காக ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம், மற்றும் மடி கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிக்கு ஏற்ப உயர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்காக மூன்று புதிய பள்ளி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கல்வியை அடுத்த கட்டத்திற்கு தரம் உயர்த்த சென்னை மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இலவச பேருந்து சேவை ஜூன் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சேவையால் மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இலவச பேருந்து சேவை தற்போது முதல் கட்டமாக கொண்டு வரப்பட்ட உள்ள நிலையில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் பேருந்து சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.