எளிமையின் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் மலர் தூவல்? காவல்துறையின் கிடுக்கிப்பிடி!!

Photo of author

By Rupa

எளிமையின் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் மலர் தூவல்? காவல்துறையின் கிடுக்கிப்பிடி!!

Rupa

Netizens are criticizing the police crackdown on the helicopter showering of flowers on Thirumavalavan.

DMK: திமுக கட்சியின் கூட்டணிக்கட்சிகளில் மிகவும் முக்கிய அங்கமாக பார்க்கப்படுவது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் மதச்சார்பிமை காப்போம் என்னும் பேரணி ஒன்றை நடத்தினார். அந்த பேரணியில் கலந்து கொள்ள கடந்த வாரம் திருமா திருச்சி வந்திருந்தார்.
அப்போது அவர் மேடைக்கு வரும்போது அவர் நிற்கும் இடத்திற்கு மேலே ஹெலிகாப்டர் மூலம் மலர் துவ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக 5 லட்சம் ரூபாய் ஹெலிகாப்டர் வாடகை பேசப்பட்டது.

ஆனால் காவல் துறை இந்த ஹெலிகாப்டரிலிருந்து மலர் துவ அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் விசிக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அனுமதி மறுப்பு குறித்து சமூக வலை தளங்களில் செய்திகள் வேகமாக பரவியவுடன் நெட்டிசன்கள் திருமாவளவனை கிண்டல் செய்து வறுத்தெடுத்துவிட்டனர். நீங்க தான் எளிமையின் சிகரமாச்சே அப்புறம் எதுக்கு 5 லட்சத்துக்கு ஹெலிகாப்டர் மலர் தூவல் என்றும், போராளிக்கு இந்த மாதிரியான ஆடம்பர அணிவகுப்பு தேவையா என்றும் கிண்டல் செய்தனர்.