DMK VSK: திமுகவில் கூட்டணி கட்சியிலிருந்து ஒன்று விக்கெட்டாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப கட்டத்திலிருந்து எங்களின் தோழமைக் கட்சி விடுதலை சிறுத்தைகள் தான் என திமுக கூறி வந்தாலும் ஒரு அடி அவர்களை தள்ளி வைத்து தான் பார்க்கின்றனர். இதனை பல பொது நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. அவ்வளவு ஏன் திருமாவே பொதுக் கூட்டம் ஒன்றில் எங்கள் சமூகத்தில் இருந்து ஒருவர் கூட முதல்வர் பதவிக்கு வர முடியாது என நேரடியாகவே கூறியிருந்தார்.
அப்படி கூறும் அவரே, உடனடியாக திமுக உடனான எங்கள் கூட்டணி பலமாக தான் உள்ளது எனவும் தெரிவிப்பார். கூட்டணியில் இருந்துக் கொண்டே மறைமுகமாக திமுகவை சாடி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் திருமாவா வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்குள் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற போவதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பாமக ராமதாஸ் திமுகவுடன் இணைய மும்முரம் காட்டி வருவதுதான். அதுமட்டுமின்றி திமுக-வும் மறைமுக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
திமுக வுடன் பாமக இணைந்தால் கட்டாயம் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று திருமா கூறியுள்ளார். இந்நிலையில் ராமதாஸ் திமுகவுடன் இணைய விருப்பப்படுவது தற்போது அளித்து வரும் பேட்டிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படி திருமா கட்சியை விட்டு வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் புதிய கட்சி உடன் கைகோர்க்கலாம் என கூறுகின்றனர். இது நடக்கும் வகையில் நேற்று மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்துள்ளார்.
அதில், திருமா மாற்றி மாற்றி பேசுகிறார் ஒரு முறை குறைந்த தொகுதி மற்றொரு முறை அதிக தொகுதி என நிலையற்று இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல குறைந்த தொகுதி கொடுத்தால் எந்த கூட்டணி கட்சியும் ஒத்துக் கொள்ளாது என்பதையும் தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கையில் திமுகவும் கூட்டணி கட்சிகள் அனைவரும் இம்முறை அதிகப்படியான தொகுதிகளை கேட்க உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் பாமக உள்நுழைந்தால் திருமா வெளியேறுவது உறுதி.