கவிஞனாக மாறி தமிழை உலகறியச் செய்த பிரதமர் மோடி

0
123

கவிஞனாக மாறி தமிழை உலகறியச் செய்த பிரதமர் மோடி

சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி ஆகியோரது சந்திப்பு கடந்த வாரம் பல்லவ பூமியான மாமல்லபுரத்தில் நடந்தது.

இச்சந்திப்பு நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் உன்னிப்பாக உற்றுநோக்கி கவனித்தனர், மாமல்லபுரத்தின் பெருமையை உலகறியச் செய்தார், பிரதமர் மோடி அதுமட்டுமில்லாமல் தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பு நிகழ்வைப் பற்றி மோடி அவர்கள் கவிதையாக எழுதி வெளியிட்டுள்ளார், ஒரு கவிஞனாக ஜொலிக்கும் அளவில் இக்கவிதை இருக்கின்றது. இதனை தமிழாக்கம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழர்களை மேலும் பெருமை அடையச் செய்துள்ளார்.

author avatar
Parthipan K