குழந்தைகள் உடல் இறந்து மிதக்கும் வரை நின்று பார்த்த கொடூரத் தாய்

0
131

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் 2 குழந்தைகளை கிணற்றில் போட்டு குழந்தைகள் இறந்து உடல் மிதக்கும் வரை பெற்றதாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. ஆரணி அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவருக்கும் இரண்டு வயதில் ஒரு மகளும் ,ஒரு வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர். புஷ்பலதாவுக்கும் அவரின் மாமியாருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் அருள்ராஜ் புஷ்பலதா உடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளார். இப்படி சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்றும் குடும்பத்தில் சண்டை நடந்துள்ளது. இதனால் சண்டை முற்றியதில் ஆத்திரம் கொண்ட புஷ்பலதா குழந்தைகளோடு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே உள்ள கிராமத்திற்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு கிணற்றில் முதலில் குழந்தைகளை வீசியுள்ளார். குழந்தைகளை வீசிய வேகத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்திருந்தால் குழந்தைகளோடு அவர் குதித்திருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. முதலில் குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டார். குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
பின் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கிணற்று ஓரமாக புஷ்பலதா நிற்பதைப் பார்த்துவிட்டு சந்தேகத்தில் அருகே ஓடி வந்துள்ள நிலையில், அவர்களை பார்த்ததும் தற்கொலை செய்து கொள்வது போல கிணற்றில் குதித்து உள்ளார். ஓடி வந்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. புஷ்பலதா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்க, குழந்தைகளின் உடல் மிதந்து உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் புஷ்பலதா மற்றும் அவரது வீட்டில் இருப்போர் இடமும் விசாரணை நடத்தி வருகின்றனர் .குடும்ப சண்டையில் பிஞ்சுகளை கொலை செய்த புஷ்பலதா விலை அந்த கிராமம் முழுவதுமே திட்டி வருகின்றனர்.
குழந்தைகளின் முகத்தைப் பார்த்தால் அவர்களை கிணற்றில் வீசி தோன்றுமா என்று பலரும் பலவிதமாக திட்டி வருகின்றனர்

author avatar
Kowsalya