மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!

0
141

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!

அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பயின்று வருகிறார்.மாணவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.

அப்போது பாலவனத்தம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாணவர் திடீரென்று தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தார்.இது குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.

அண்மையில் படியில் நின்று பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது.படியில் பயணம் நொடியில் மரணம் என்று பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்திற்கு ஏற்றார்போல் நேர்ந்துள்ள இந்த உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையேயும் சக மாணவர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Pavithra