30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!!

0
52
#image_title

30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!!

30 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு அவர்கள் நேற்று(செப்டம்பர்18) இரவு திடீரென்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான “என் உயிர் தோழன்” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகர் பாபு அவர்கள் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனின் வாழ்கையை விவரிக்கும் என் உயிர் தேவன் திரைப்படம் கவனிக்க வேண்டிய படங்களுள் ஒன்று. ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

அதன் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் உருவான பெரும்புள்ளி திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கோபி பீம்சிங் இயக்கத்தில் தாயம்மா திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பொண்ணுக்கு தேதி வந்தாச்சு என்ற திரைப்படத்திலும் நடிகர் பாபு நடித்திருந்தார்.

மனசார வாழ்த்துங்களேன் என்ற திரைப்படத்தின் பொழுது நடிகர் பாபு அவர்களுக்கு விபத்து ஏற்பட்டது. அதாவது படப்பிடிப்பின் பொழுது உயரமான இடத்தில் இருந்து குதிக்க வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்பொழுது டூப் பட்டுக் கெள்ளலாம் என்று கூறியும் நடிகர் பாபு அவர்கள் கேட்காமல் நானே அதில் நடிக்கின்றேன் என்று கூறி உயரமான இடத்தில் இருந்து நடிகர். பாபு அவர்கள் குதித்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பாபு அவர்களுக்கு முதுகு எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அந்த விபத்து ஏற்படுத்திய பாதிப்பு நடிகர் பாபு அவர்களை படுத்த படுக்கை ஆக்கியது. சில நாட்கள் நடந்தாலும் மீண்டும் படுத்த படுக்கை நிலைக்கு நடிகர் பாபு அவர்கள் சென்றார். அப்பொழுதும் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆகாமல் இருந்த “அனந்தகிருஷ்ணா” திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.

கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு அவர்களுக்கு உடல் நிலை மோசமைடந்தது. இதனால் நடிகர் பாபு அவர்கள் நேற்று(செப்டம்பர்18) இரவு உயிரிழந்தார். நடிகர் பாபு அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.