முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி! இதுதான் காரணமா?

0
112
Actor vijay sethupathi meets chief minister
Actor vijay sethupathi meets chief minister

முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி! இதுதான் காரணமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன்.மேலும் விஜய் சேதுபதி காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.இந்தத் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.விக்னேஷ் சிவன்,நயன்தாரா,லலித் குமார் ஆகியோர் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.நடிகை சமந்தாவும் நடிகை நயன்தாராவும் இந்த படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர்.இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த நிலையில் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி திடீரென புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்தார்.அவர் முதல்வரை சந்தித்து கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.அந்த கோரிக்கையில் நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல் அமைச்சரிடம் படப்பிடிப்புக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் அந்த கட்டணத்தைக் குறைக்குமாறும் வலியுறுத்தினார்.

அதாவது படப்பிடிப்புகளுக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வசூலித்து வந்த நிலையில் தற்போது அந்த கட்டணம் அதிகரித்து 28000 ரூபாயாக உள்ளது.இது திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியைத் தருகிறது.மேலும் சிறிய பட்ஜெட் திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு இது பெரிய பாதிப்பாக இருக்கிறது எனவும் விஜய் சேதுபதி கூறினார்.இந்த கோரிக்கையை ஏற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த கட்டணம் தொடர்பான கோரிக்கையை தான் பரிசீலனை செய்வதாக கூறினார்.

author avatar
Parthipan K