நடிகை டாப்ஸி செய்த செயல்!!ரசிகர்களால் அவருக்கு குவியும் பாராட்டு!

0
226

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு ஐபோன் ஒன்றை படிப்பிற்காக அனுப்பி வைத்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர் PUC தேர்வில் 94 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த பெண்ணிற்கு டாப்ஸி அவருடையை online வகுப்புக்கு பயன்படும் வகையில் ஐபோன் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுள்ளார்.இதனை பெற்றுக் கொண்ட அந்த மாணவி செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் நீட் தேர்வில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று மகிழ்ச்சியில் கூறியுள்ளார்.

மாணவிக்கு உதவி செய்த பின் பேசிய டாப்சி சமுதாயத்தில் மாணவிகள் அதிகம் படிக்க வேண்டும். பெண்களின் கல்வியால் நம் நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதை உறுதி செய்வதில் இது எனது சிறிய முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

Previous articleஇனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Next article“கொரோனா எனது சகோதரனை காவு வாங்கிவிட்டது”: கண்ணீர்விடும் அக்‌ஷரா ஹாசன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here