விஜய்யுடன் உல்லாசமாக வாழ்ந்து தற்கொலைக்கு முயன்ற அஜித் பட நடிகை

0
336
#image_title

விஜய்யுடன் உல்லாசமாக வாழ்ந்து தற்கொலைக்கு முயன்ற அஜித் பட நடிகை

விஜய்யுடன் உல்லாசமாக வாழ்ந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ‘S’ எழுத்து நடிகை.இவர் அஜித் உடன் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்,நடிகைகளை பொறுத்தவரை காதல்,திருமணம் என்பது சாதாரண விஷயமாக இருந்து வருகிறது.இரண்டு,மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் நடிகர்,நடிகைகள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.

அதேபோல் பல பேருடன் காதல் உறவில் இருந்து விட்டு பின்னர் லிஸ்டில் இல்லாத ஒருவரை திருமணம் செய்து குழந்தை குட்டி என்று சந்தோஷமாக வாழும் நடிகர்,நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

படத்தில் யோக்கியர்கள் போல் காட்டிக் கொள்ளும் நடிகர்களில் பலர் நிஜ வாழ்க்கையில் வில்லன்களை விட மோசமானவர்களாக இருப்பார்கள்.அதில் ஒருவர் தான் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய்.

விஜய் அவர்கள் தனது தீவிர ரசிகையான சங்கீதா என்ற லண்டன் வாழ் இலங்கை தமிழ் பெண்ணை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்,திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளார் என்பது ஊரறிந்த உண்மை.ஆனால் திருமணத்திற்கு முன் விஜய் அவர்கள் தன்னுடன் இணைந்து நடித்த நடிகையை தீவிரமாக காதலித்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த சங்கவி குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.இவர் விஜய்யுடன் விஷ்ணு,ரசிகன்,கோயம்புத்தூர் மாப்பிளை,நிலவே வா என்று 4 படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.இதில் ரசிகன்,கோயம்புத்தூர் மாப்பிளை ஆகிய படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்திருக்கும்.

படத்தில் முத்தக்காட்சி,கட்டி அணைத்தல்,குளியல் என்று அனைத்து வித ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்த இவர்களுக்குள் அதிகளவு நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது.இதனால் விஜய், ஊட்டி மற்றும் சென்னையில் பங்களா வாங்கி சங்கவியுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.விஜய்-சங்கவிக்கு திருமணத்தை தவிர மற்ற அனைத்தும் நடந்து விட்டது என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

ஒருகட்டத்தில் சங்கவியே கதி என்று கிடந்த விஜய்யை ரீல் லைஃப் வேறு,ரியல் லைஃப் வேறு.நம் குடும்பத்திற்கு ஒரு நடிகை மருமகளாக வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று எஸ்ஏசி சொல்லிய பின்னர் தான் இவர்களின் காதல் முடிவிற்கு வந்திருக்கிறது.

மேலும் விஜய் உடனான காதலை அவரது தந்தை எஸ்ஏசி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சங்கவி விஷம் அருந்தி மருத்துமனையில் அனுமதித்து காப்பாற்றப்பட்டார் என்ற செய்தி பரவி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.