திருக்கோவிலூர் அருகே படுகொலை செய்யப்பட்ட முக்கிய நிர்வாகி! கடும் கோபத்தில் டிடிவி தினகரன்!

0
73

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.இப்படியான சூழ்நிலையில், கோவிந்தன் இன்றைய தினம் ஞானம் பெற்றான் தாங்கல் கிராமத்தில் இருக்கின்ற அவருடைய நிலத்தை கவனிப்பதற்காக சென்று இருக்கின்றார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் மறைந்திருந்த ஒரு சில மர்ம நபர்கள் அவரை கண்ணிமைக்கும் சமயத்தில் தாக்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கோவிந்தன் அவர்களை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகைதந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்தப் படுகொலைக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து இருக்கின்றார். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.இதுதொடர்பாக இன்றையதினம் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கோவிந்தன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணம் அடைந்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

அதோடு கோவிந்தன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்தப் காவல்துறையினர் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து இருக்கின்றார்.