ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத நடிகர்!! வியப்பில் ரசிகர்கள்!!
தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மடோன் அஷ்வின் மாவீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின் ஆகிய நடிகர்களும் நடித்து உள்ளார்கள். இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. முதல் பாடலை பரத் சங்கர் இசையமைப்பில் அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இரண்டாம் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளார்கள். ஜூலை14 ஆம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.
இந்த படத்தில் முக்கிய கதை தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் எப்படி மாவீரனாக மறுக்கிறான் என்பது எந்த படத்தின் கதை ஆகும். இந்த படத்தில் பாதி கதை விறுவிறுப்பு நிறைந்தும், அதிக நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் இந்த படத்தில் ஹீரோக்கு மட்டும் ஒரு குரல் கேட்டும்.
இந்த நிலையில் படத்திற்கு முக்கிய குரல் கொடுத்து மூலம் அனைவராலும் பாராட்டுகளை பெற்றார் விஜய் சேதுபதி. அந்த படத்திற்கு தனது கன்மிரமான குரலை வெளிபடுத்தினார். மேலும் இந்த குரல் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைத்தது. ஆனால் இதற்காக இவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்க இல்லை என்று தகவல் வந்துள்ளது.
மேலும் இவர் குரல் கொடுக்கும் முன்பே தனக்கு சம்பளம் வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் கூறினார் என்று சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் அவர் மிகவும் எளிமையானவர் என்று இணையத்தில் தகவலை பரப்பி வருகிறார்கள்.