அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

0
75

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

நடிகர் அருண்விஜய் தற்போது மாபியா மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அருண்விஜய்யின் 31 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த ’குற்றம்23’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அறிவழகன்-அருண் விஜய் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்க நடிகை ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இரண்டாவது நாயகியாக நடிக்க ஸ்டெபி பட்டேல் என்பவர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் பகவதி பெருமாள் நடிக்க உள்ளார். குற்றம்23 படம் போலவே இந்த படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் . ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் மற்றும் விஜய ராகவேந்திரா நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

author avatar
CineDesk