ஆசியக் கோப்பை தொடர் 2023!!! பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பற்றி விராட் கோஹ்லி கருத்து!!!

0
81
ஆசியக் கோப்பை தொடர் 2023!!! பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பற்றி விராட் கோஹ்லி கருத்து!!!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் சூழலில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பற்றி இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் நாளை(செப்டம்பர் 1) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.
உலகமே எதிர்பார்க்கும் போட்டியாக இந்திய பாகிஸ்தான் போட்டி உள்ளது. அதற்கு காரணம் பல வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளது தான் காரணம். இந்நிலையில் பாகிஸ்தான்.அணியின் பந்துவீச்சாளர்கள் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பற்றி விராட் கோஹ்லி அவர்கள் “பாகிஸ்தான் அணிக்கு அவர்களுடைய பந்துவீச்சு தான் அவர்களுடைய மிகப்பெரிய பலத்திற்கு காரணம் என்று நான் உணர்கிறேன். போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் இருக்கின்றனர்.
போட்டியில் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறன் படைத்த பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். அதனால் நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். என்னுடைய ஆட்டத்தை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். என்னுடைய ஒவ்வொரு பயிற்சியின் பொழுதும், என்னுடைய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் எனக்கு அந்த புரிதல் உதவியுள்ளது” என்று கூறியுள்ளார்.