ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூபாய் 52 லட்சம் பணத்துடன் டிரைவர் ஓட்டம்?

0
79

ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூபாய் 52 லட்சம் பணத்துடன் டிரைவர் ஓட்டம்?

சென்னை தி நகர் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. நேற்று மாலை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் அசோக் நகரைச் சேர்ந்தவர். தலைமையில் ஊழியர்கள் கேகே நகரைச் சேர்ந்த வினோத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது ஆகியோர் காரில் வந்து பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு இருந்தனர்.

காரை வேளச்சேரியை சேர்ந்த அம்ப்ரோஸ் என்ற டிரைவர் ஓட்டி வந்தார் தேனாம்பேட்டையில் உள்ள 5 வங்கி ஏடிஎம்களில் மையங்களில் பணத்தை நிரப்பிவிட்டு 87 லட்சத்து உடன் வந்தனர் வேளச்சேரி விஜய நகர் 1-வது பிரதான சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர் பாதுகாப்பாக முகம்மது துப்பாக்கியுடன் atm இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பிற்கு சென்று விட்டார்.

காரில் மீதம் ரூபாய் 52லட்சத்தை வைத்து இருந்தனர் . அப்போது சற்று தள்ளி காரை ஓரமாக நிறுத்துவதாக டிரைவர் காரை எடுத்துச் சென்றார்.
மூன்று பேரும் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பி விட்டு வந்தனர் ஆனால் சற்று தள்ளி காரை நிறுத்த கூறிய அம்ப்ரோஸ் வாகனம் காணாது அதிர்ச்சி அடைந்த மூவரும் அந்த பகுதி முழுவதும் தேடியும் அவரைக் காணவில்லை.

செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது ரூபாய் 52 லட்சத்துடன் டிரைவர் அம்ப்ரோஸ் தப்பிச் சென்றதை அப்போது அறிந்தனர்.

இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில் போலீசார் வினோத் உட்பட 3 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துடன் தப்பி சென்ற அம்ப்ரோஸ் வேளச்சேரி முகவரி தந்து உள்ளதால் அந்த முகவரிக்கு சென்ற போது அங்கும் அவர் இல்லை இதனால் அவர் பணத்துடன் எங்கு சென்றார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
CineDesk