வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! தமிழகத்தில் போக்குவரத்து திசை மாற்றம்!!

0
35
Attention motorists!! Traffic direction change in Tamil Nadu!!
Attention motorists!! Traffic direction change in Tamil Nadu!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! தமிழகத்தில் போக்குவரத்து திசை மாற்றம்!!

தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளை மேம்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல முக்கிய சாலைகள் சேதமாகியுள்ளது அதனால் அதனை அரசு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது.அந்த வகையில் அவ்வப்போது போக்குவரத்து பாதைகளை மாற்றி கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் சந்தி பிள்ளயார்  கோவில் மண்டபத்தின் அருகில் உள்ள சாலையின் ஓரத்தில் பழுதடைந்த வாய்க்கால் ஒன்று நீண்ட காலமாக உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தற்பொழுது அரசு அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எனவே அங்கு கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் கணேஷ் தியேட்டரில் இருந்து சந்தி பிள்ளயார் லட்சுமி மஹால் குளப்பிறை தெரு வழியாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிய வேண்டும் என்றால் 046 – 2562651   என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

author avatar
Parthipan K