சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

0
116

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் மேலும் 1000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் புகார்களை தெரிவிப்பதற்கும் போக்குவரத்துக் கழகம் 9445014450 மற்றும் 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாமென்று தெரிவித்துள்ளது.

மேலும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1800425615 மற்றும் 044 – 24749002
044 – 26281611என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் மக்களுக்கு,பயணிகளின் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 20 இடங்களில் மே ஐ ஹெல்ப் யு(may I help you)என்ற பெயரில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra