காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்!

0
252

காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்!

கல்லூரியில் பணி புரிந்த பெண் ஊழியரை அவரது காதலனே நிர்வாணப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது நண்பரான டிரைவர் ஒருவருக்கு அனுப்பியிள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து டிரைவர் சம்பந்தப்பட்ட கல்லூரி பெண் ஊழியரை தன்னுடைய ஆசைக்கும் இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

இதுபற்றி அந்த கல்லூரி பெண் ஊழியர், தனது தந்தையுடன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரையும், அந்த டிரைவரையும் ஆத்தூர் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சம்பந்தப்பட்ட டிரைவரின் செல்போனை வாங்கி போலீசார் விசாரித்தனர். அந்த டிரைவரின் செல்போனில் மேலும் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது தெரிய வந்தது மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.

அந்த டிரைவரின் செல்போனில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது, உல்லாசமாக இருப்பது, குளிப்பது போன்ற படங்கள் இருந்தது பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்கள் யார்? அந்த படங்களை எடுத்தது யார்? படங்களை எப்படி எடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

போலீஸ் விசாரணையில் செல்போனில் நிர்வாண படங்கள் இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதால், பொள்ளாச்சி சம்பவம் போன்று ஆத்தூரில் நடைபெற்று இருக்குமோ? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleமுதலமைச்சர் எடப்பாடியாருடன் மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு! 7 தமிழர்களின் விடுதலை குறித்து ஆலோசனை.
Next articleM.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here