கன மழை பெய்ய இருக்கும் 9 மாவட்டங்கள்! பொதுமக்களே உஷார்!

0
86

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தேனி கோவை உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் அதோடு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் தேனி, கோவை நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாளை மறுநாள் மற்றும் 13ஆம் தேதி ஆகிய தினங்களில் தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.