விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் தீ விபத்து! 11 பேர் பலியான துயர சம்பவம்

11 Persons killed in fire accident at Vijayawada hotel

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பட்டு வந்தது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், மேலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை தற்காலிகமாக கொரோனா தனிமைப்படுத்துதல்  மையமாக மாற்றினர். இதனையடுத்து இங்கு 50 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் தங்கியிருந்தனர். இந்த … Read more

பொறியியல் படிப்புக்கு சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி

பொறியியல் படிப்புக்கு சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான, சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அந்த நிறுவனம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மொத்த பணியிடங்கள்: 20 பணியின் தன்மை: Dairy Technologist, Data Entry Operator (DEO), MBA Graduates சம்பளம்: Dairy Technologist – மாதத்துக்கு ரூ.23,000/- Data Entry Operator (DEO) – நாளொன்றுக்கு ரூ.576/- MBA Graduates – … Read more

குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண உதவி! மத்திய அரசு அறிவிப்பு

Parliament-News4 Tamil Online Tamil News

கேரள மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் விமானத்தில்பயணம் செய்த 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.மேலும் இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் … Read more

வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை

BJP Person Misbehave with School Child

சென்னை ஆவடி பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டரை சுற்றி வளைத்து சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியில் உள்ள கொள்ளுமேடு என்ற இடத்தில் வசித்து வரும் தம்பதிக்கு பதினாறு வயதில் பெண் உள்ளார். இந்த பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். அவரது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த 16 வயதாகும் சிறுமியை … Read more

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அதிர்ச்சி அறிவிப்பு

Anna University-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று நிச்சயம் இதை செய்ய கூடாது! இன்றைய ராசிபலன் 02.08.2020

Rasi Palan Today

இன்றைய நாள்: 02-08-2020, ஆடி மாதம், 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. நல்ல நேரம்: இராகு காலம் – மாலை 04.30 முதல் – 06.00 வரை எம கண்டம் – பகல் 12.00 முதல்  – 01.30 வரை குளிகன் – பிற்பகல் 03.00 முதல் – 04.30 வரை ஒவ்வொரு ராசிக்கரர்களுக்கும் இன்றைய ராசிப்பலன் – 02.08.2020 மேஷம் மேஷ  ராசிக்காரர்களாகிய உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் … Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Announcement for Government Arts and Science College Students

கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய முறையை மாற்றி விட்டு 2 ஷிப்டுகளின் அடிப்படையில் சுழற்சிமுறை வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மீண்டும் பழைய முறையையே செயல்படுத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமீபத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரான அபூர்வா இது குறித்து அரசாணையாக வெளியிட்டு இருந்தார். அந்த அரசாணையில் தற்போதுள்ள ஷிப்ட்-1, ஷிப்ட்-2 என்ற சுழற்சி … Read more

சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடல்! தொடரும் பரபரப்பு

China Closed US embassy

அமெரிக்காவில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள்,தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது … Read more

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்

கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் … Read more