சீன பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் இந்தியாவின் அடுத்த மூவ்!
Anand
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய முறையை மாற்றி விட்டு 2 ஷிப்டுகளின் அடிப்படையில் சுழற்சிமுறை வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மீண்டும் பழைய முறையையே செயல்படுத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமீபத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரான அபூர்வா இது குறித்து அரசாணையாக வெளியிட்டு இருந்தார். அந்த அரசாணையில் தற்போதுள்ள ஷிப்ட்-1, ஷிப்ட்-2 என்ற சுழற்சி … Read more
சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடல்! தொடரும் பரபரப்பு
அமெரிக்காவில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள்,தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது … Read more
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்
கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் … Read more
மாணவர்களுக்கு ரூபாய் 2000 உதவித்தொகை வழங்க அறிவிப்பு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் ரூபாய். 2,000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மற்றும் ஹரி நாடார் மிரட்டலால் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,இயக்குனருமான சீமானை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்தது தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியான ஃபிரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் மற்றும் மீசைய முறுக்கு போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னையில் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அவர் வீடியோவை வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். … Read more
ரேஷன்கார்டு உள்ளவர்களுக்கான அடுத்த இலவசத் திட்டத்தை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 2 முககவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் ஆரம்ப கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் முககவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரேஷன் கடைகளில் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் … Read more
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதையடுத்து அதனை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வாகனங்கள் போக்குவரத்து குறைந்ததால் அன்று முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தன. இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக உயர்த்தத் தொடங்கின.ஜுன் மாதம் இறுதி வரை … Read more
கல்லுரி தேர்வுகள் ரத்து: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லுரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து கல்வியாளர்கள் குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு … Read more
சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் என்பவரும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் லாக்கப்பில் மரணமடைந்தனர்.இதற்கு காவல்துறையினர் விசாரணையின் பேரில் நடத்திய கொடூர தாக்குதல் தான் காரணம் என கூறப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்த … Read more